மாணவர்கள் தற்கொலைகளுக்கு காரணம்..எது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.தன்னால் அடையமுடியாத மருத்துவர், பொறியாளர் தகுதியை தன் குழந்தைகள் அடைந்தே ஆக வேண்டும். சமூகத்தில் தன் மகனோ மகளோ என் மகன் ஒரு பொறியாளர், என் மகள் ஒரு டாக்டர் என்று பெருமை பேசிக்கொள்ள தனது குழந்தையின் விருப்பமும் திறமையையும் ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் , நீ பொறியியல் படி, அதுவும் சாப்ட்வேர் தான் இனி எல்லாமே , அதையே படி, வெறும் M.B.B.S ., போதாது போஸ்ட் கிராஜுவேஷன் பண்ணு அப்பதான் மறியாதை கிடைக்கும் , இப்படி அலையும் பெற்றோர்களால் தற்கொலைகள் அதிகரிக்காமல் வேறு என்ன எதிர்ப்பாக்கமுடியும்? ஒரு தந்தை தன் மகனுக்கு அறிவுரை சொல்லாமல் அவனுக்கு பாடம் சொல்லிதரும் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தை படிங்க..
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.

0 comments:
Post a Comment